Friday, June 17, 2011

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

நேற்றைய நடவுகள்
உடல் நல விழிப்புணர்வு மற்றும் அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...
மகளிர் தினத்திலிருந்து யோசித்து, ஒரு வழியாக நேற்று நடந்து முடிந்தது எங்கள் அலுவலகத்தில் ( Chennai I Commissionerate, Chennai 34)

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

மரு. ரத்னா அவர்கள் நமது வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை முறை மாற்றம், சிந்தனை முறை மாற்றம் மற்றும் ஓய்வு எடுக்கும் முறை பற்றி அருமையாக, எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசினார்கள். காலை எழுந்தவுடன் காபி, தேநீர் அருந்துவதற்கு பதிலாக, அருமையான "பசுமை குடிநீர்" ( Green Juice) அருந்துவதன் நன்மைகளை விளக்கினார்கள். ஒரு குவளை நீரை கொதிக்க வைத்த இறக்கி, அதில் ஒரு கையளவு ஏதாவது ஒரு இலை (கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, அருகம்புல்,முருங்கை இலை ) போட்டு, ஒரு ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி குடித்து வந்தால் வயிறு மிகவும் லேசாக உணர்வீர்கள். தேவையற்ற கழிவுகள், அதிக வெப்பம் ஆகியவை வெளியேற்றப்படும். காபி, தேநீர் குடித்தே ஆக வேண்டும் என்றிருப்பவர்களும் காலை உணவிற்குப்பிறகு அருந்தலாம்...அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும்....பிறகு உணவு அருந்தும் முறை. ரசித்து / சுவைத்து அருந்தும் வழக்கம் வந்தாலே, வயிற்றிற்கும், மண்ணீரலிற்கும் பாதி சுமை குறையும். ஜீரணத்தின் 70 சதவீதம் வாயில் உமிழ்நீருடன் கலந்து முடிவடைந்தாலே பாதி நோய்களை தவிர்த்து விடலாம்.....அது போல உணவு அருந்தும்போழுது பேப்பர் படிப்பது, தொலைகாட்சி பார்ப்பது போன்ற வேறு கவன சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். அதுவும் வயிற்றிற்கு நன்மை செய்யும்......

சிந்தனை முறை மாற்றம் வர நல்ல எண்ணங்களையே எண்ணி, அவற்றை நோக்கிய செயல்பாடு வேண்டும்.... ஓய்வு எடுக்க, இரவு 9-10 மணிக்குள் படுக்கைக்கு செல்லும் வழக்கம் வர வேண்டும். படுத்தவுடன் அன்று நடந்தவைகளை ஒரு கணம் நினைத்துபார்த்து, நாளைய செயல்களையும் திட்டமிட்டு முடித்தவுடன், மனதிலிருந்து அனைத்து எண்ணங்களையும் அகற்றி, அமைதியுடன் உறங்க செல்ல வேண்டும்....

பேச்சு முடிந்தவுடன், வந்திருந்தோர் பல கேள்விகளும் கேட்டனர்...மரு. ரத்னா மற்றும் மரு.தமிழவேள் அவர்கள் அழகான முறையில் விளக்கம் அளித்தனர்.....கேள்விகளில் சில, "மன நலம் சார்ந்த பிரச்சினைகளை உங்கள் முறையில் சரி செய்ய முடியுமா., புற்று நோயை குணப்படுத்த முடியுமா, அவசர கால சிகிச்சைகளை உங்களால் செய்ய முடியுமா.....நீங்கள் ஆங்கில மருத்துவ குறிப்புகளை பார்ப்பதில்லையா...."

பிறகு சிகிச்சை முறை...மரு.தமிழவேள் அவர்கள் இறைவழி முறையிலும், மற்ற மருத்துவர்கள் (ரத்னா, மாலினி, கற்பகம், பவானி, செல்வி) அக்குபஞ்சர் முறையிலும் சிகிச்சை அளித்தனர்.....அனைவருக்கும் நாடிப்பரிசோதனை செய்து தேவைப்பட்டோருக்கு சிகிச்சையும் மற்றவர்க்கு நலமாய் வாழ நுண்ணழுத்தப்புள்ளிகளை எவ்வாறு அழுத்துவது என்பதையும் சொல்லிக்கொடுத்தனர்....

முகாமிற்கு வந்தவர்களுக்கு ஒரு சிறு தொகை வாங்கி உபயோகமான உடல் நலக்குறிப்புகள் அடங்கிய ஒரு கையேடு மற்றும் குளியல் போடி ஒரு பொட்டலமும் தரப்பட்டது.....

மிகவும் உபயோகமுள்ளதாக அனைவரும் உணர்ந்தனர். இதில் கலந்து கொள்ள விடுபட்டோரும் வந்தோர் அனுபவம் கேட்டு, பிறிதொரு முறை நடக்குமா என விசாரித்த வண்ணம் உள்ளனர்.........

Monday, March 21, 2011

ஒரு சமூக பள்ளி....எனது வேட்கை.....

ஒரு சமூக பள்ளி....எனது வேட்கை.....


வழக்கம்போல யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.....இது சரியில்லை அது சரியில்லை என்றி யோசtதுகொண்டேயிருந்தால் எப்படி, கொஞ்சமாவது அமைப்புகளை மாற்ற ஆரம்பிக்க வேண்டாமா....அதற்காகதான் நமக்கு கடவுள், இயற்கையோடு இனைந்து வாழ விரும்பும் ஒரு குழந்தையை கொடுத்திருக்கிறாரோ..... என்று நினைப்பேன்......

ரித்திகா - குழந்தை பெயர் புத்தகத்தில் கொடுத்திருந்த விளக்கம்....தெளிந்த நீரோடை...அவள் பெயரை புத்தகக்கடையில் இருந்தே மாலினியும் அவள் அப்பாவும் படித்து காட்ட,உடனே பிடித்தது அனைவருக்கும்.......ஆம் பெயருக்கேற்றவாறு தெளிந்த நீரோடை போன்ற எண்ணங்கள்.......இயற்கையிலிருந்து வழுவாத குழந்தை மனது.....மாற சொல்லும் இந்த உலகை பிடிக்காத நேரம் ஒரு பிடிவாத அழுகை, அழுத்தம்.......பாவம் இந்த குழந்தைகள். அவர்களின் குழந்தை தனத்தை தொலைக்க வைப்பதும் நாம் தான்.....அதை தொலைத்த பின்னர், "இது என்ன குழந்தையாகவா பேசுகிறது என்று சலித்து கொள்வதும் நாம் தான்".

நேற்று (20.3.2011) அவளிடம் தமிழவேள் அங்கிளின் நண்பர் (சரவணன்) , குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவதே இல்லையாம்.. வீட்டிலேயே ஆசிரியரை அழைத்து படிக்க வைக்கிறாராம். என்று கூறினேன்...உடனே பளிச்சென்று எனக்கொரு பதில்...(கொஞ்சம் சோகம் கலந்த)...."என்னையும் அப்படியே செய்திருக்கலாம் என்று"...

முதலில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்தவுடன் சில நாட்கள் பள்ளி செல்ல மிகுந்த அழுகை...மதியம் வீட்டிற்கு வந்து உணவு உண்ட பழக்கம் மாறியது புரியாமல், பிடிக்காமல், கோபம், விரக்தி....புவனாவும் சில நாட்கள் ரித்துவிர்காக ஒரு பள்ளி ஆரம்பிக்க போகிறேன் என்று சொன்னவுடன் சிறிது நாள் குதூகலம்...ஆனால் வழக்கம் போல நமது வாழ்க்கை சக்கரம் சுழல, அவரவர் அவரவர் வேலையில் இருக்க, அவளும் ஓரளவு பள்ளிக்கு பழக....என்று வாழ்க்கை ஓடி கொண்டிருக்கிறது...ஆனால் ஒரு ஆறுதல் அவளது பள்ளி தாளாளர் (ஆர்த்தி ) எப்பொழுதும் எந்நேரமும் நேரில் பேசலாம்...அவரும் அவரது குழந்தைகளை அரை நாளே பள்ளியில் இருக்க வைக்கிறார். (அவரே சிறு வயதில் எப்பொழுதும் அரை நாளே பள்ளி படித்ததாகவும், சென்னை வந்தவுடன் தான் நிறைய பள்ளிகள் முழு நாள் பள்ளி வைத்ததை பார்த்ததாகவும் கூறினார்... எங்களுக்கும் அந்த சலுகை கொடுக்க கேட்டோம். முதலில் இதை ஒரு சோதனை முயற்சியில் செய்ய ஆரம்பித்ததாகவும், அப்பொழுது இருந்த முன்னூறு குழந்தைகளில் நூறு பேர் உடனே பள்ளியை விட்டு சென்று விட்டதாகவும் கூறினார்....எப்படியும், அடுத்த வருடம் திரும்ப இந்த சோதனை முயற்சி செய்ய இருப்பதாக கூறினார். அதை தவிர இந்த வருடம் நிறைய "ACTIVITIES" - செயல் முறை கல்வி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறினார்.... ஏற்கனவே CBSE BOARD அனைத்து வகுப்புகளிலும் கரும்பலகை மற்றும் வெண்திரை (IN Ritu's words - A/V - Audio Visual Screen) - 01.04.2011 முதல் அறிமுகம் செய்ய இருக்கிறது....ரித்துவும் அந்த நம்பிக்கையில் தான் இரண்டாவது வகுப்பிற்கு சரியென்று சொல்லியிருக்கிறாள்.....


ஆனாலும் இன்னொரு முறை அவள் அழுவதற்குள்....இறைவா ஒரு வழி காட்டு.....